Tuesday, September 2, 2014

மோதிரம்





சில பல காலங்களுக்கு முன்பு, புகைப்படங்களுக்குக் கவிதை எழுதி வந்தேன். அதை, ஞாபகம் வைத்து தோழி சரண்யா, இந்த புகைப்படத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதோ அது உங்கள் முன்னே !


னைக் காணா வேளையில் 
நான் கடிக்கும் ஆறாம் விரல் 
மோதிரம்.

மோதிரத்தின் வெற்றிடமாய் 
என்னுள்ளம் தானிருக்க ...
தினம் தினம் நிரப்புகிறாய் 
விரலால் ... விழியால் .. 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Thursday, August 21, 2014

இப்படிக்கு மருத்துவன்


குறிப்பு : நீயா நானா 17/08/2014 நிகழ்ச்சி கண்டு மனம் வெதும்பி எழுதியது. அரசியல் படுத்தாதீர்கள்.

ருத்துவர்களை மருத்துவம் பார்க்க விடாமல்
வாதாட அழைக்கிறது இந்த 'வக்கீல்' சமூகம்
பொருத்தது போதும் பேசி விடலாம்
என எத்தனித்தால் - ஓர் இருமல் சத்தம்
என்னைக் கலைத்து விடுகிறது
நுரையீரல் புற்றோ இல்லை
உடல் உருக்கும் காச நோயோ இல்லை
மழைக்கால சளி இருமலோ ?
Bronchoscopy ஓ? இல்லை
Sputum Smear ஓ? இல்லை
வெறும் Antibiotic ஓ ?
சொல்லலாமா ? வேண்டாமா ?
சொன்னால் நான் காசு பிடுங்குபவன்
சொல்லாவிடில் நான் மருத்துவம் படிக்காதவன்
நடப்பது நடக்கட்டும்
சொல்லிவிடுகிறேன்
இதையெல்லாம் செய்து விடுங்கள்; - ஆம்
எங்களைத் திட்டுவதற்காகவாவது நீங்கள்
உயிருடன் இருக்க வேண்டுமல்லவா ?
- இப்படிக்கு மருத்துவன்.

- சத்தியசீலன் @ கிறுக்கல்கள் 100 

Monday, July 28, 2014

இதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்



முன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.



இசை : உமாசங்கர் 
வரிகள் : மரு.சத்தியசீலன்
இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்



படத்தின் சுட்டி : https://www.youtube.com/watch?v=UstJCj5r2dw

 தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
சிநேகம் உன்னோடு
யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே
எந்தன் கண்ணோடு

மொழியிழந்தேன் திரிந்தேன்
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
( ஹம்மிங் )

ரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே .... 
( ஹம்மிங் ) 

ன் தேடல் பிழை நீ 
மழை தேடும் முகில் நீ - நான் 
கிறுக்காத கவிதைகள் நீ 

ன் தோளில் விழும் நீ 
மடியில் எழும் நான் - உன் 
ஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல். 

ங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும் 
காதலில் உனை நனைப்பேன் 
நரைகள்  விழுந்தாலும்  பிறைகள் தேய்ந்தாலும் - உன் 
காலடி நான் கிடப்பேன்.
( ஹம்மிங் ) 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும் - விமர்சனம்


னாதை ஆசிரமத்தில் வளர்ந்து, பெரியவனாகி, முகத்தில் புன்னகையும், பேச்சில் மயக்கும் வித்தையையும் கொண்ட 'பிக்ஸ் இட்' நிறுவனத்தின் சேல்ஸ் ரெப்  அரவிந்த் ( அறிமுகம் துல்கர் - நடிகர் மம்முட்டியின் மகன்)  உடைந்ததை எல்லாம் ஒட்ட வைக்கின்றார் உறவுகள் உட்பட. இவரே கதையின் நாயகன். பார்க்கும் பட்சத்தில் ஒட்டிக் கொள்ளும் முகபாவம், நடிப்பு, மென்மை துல்கருக்கு. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்வரவு.

முகத்தில் மெல்லிய சோகம் இலையாட, காதலனின் விருப்பங்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளும், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே முடங்கிக்கொள்ளும், அப்பாவின் இரண்டாம் திருமணத்தை அங்கீகரித்தும், அதனை தன் மனம் ஏற்க முடியாமல், இறந்த தன் தாயில் நினைவுகளோடு வாழ  ஏங்கும் பனிமலை அரசு மருத்துவமனையின் இளம் மருத்துவர் அஞ்சனா, கதையின் நாயகி. ( நஸ்ரியா )

ஸ்ரியாவின் சித்தியாக, எழுத்தாளராக மதுபாலா, சுகாதரத் துறை அமைச்சராக பாண்டியராஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் சங்கத் தலைவராக ரோபோ சங்கர், துல்கரின் நண்பன் அர்ஜுனன், அமைச்சரின் பி.ஏ வாக காளி, ஆசிரம இடத்தின் உரிமையாளராக வினுச்சக்கரவர்த்தி, நியூக்கிளியர் ஸ்டாராக ஜான் விஜய்,   ரேடியோ ஜாக்கி பாலாஜி, அப்புறம் முக்கியமாக, ப்ரைம் டிவியின் செய்தி வாசிப்பாளராக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இன்னும் பலர் இணைத்து கலந்து கட்டிய காமெடி மற்றும் கொஞ்சம் கருத்து நிறைந்த படமே வாயை மூடி பேசவும்.

னிமைலையை  "டம்ப் ஃப்ளு" என்ற வியாதி தாக்குகிறது. அது என்ன, எப்படி பரவுகிறது, எப்படி அதைத் தடுப்பது என ஒரு டாக்டர் கணக்காக அவர்களே சொல்லிவிடுகின்றனர். அதலால், நாம் யாரும் பயப்படத் தேவையில்லை. அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை யாரும் யாருடனும் பேச கூடாது எனும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏனெலில் அது பேசுவது மூலம் தான் பரவுமாம். இத்தகைய சூழலில், ஆர்.ஜே வாகத் துடிக்கும் துல்கர், தன் காதலை பிடிக்க வில்லை என சொல்லத் துடிக்கும் நஸ்ரியா மற்றும் பலரின் சூழ்நிலை என்னாகிறது என்பதே படத்தின் சுருக்கக் கதை.

காமெடி கலாட்டாவிற்கு ரோபோ உத்திரவாதம். 'விஸ்வரூப' விவகாரத்தை எடுத்துக் கலந்து கட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் முன் பாதி சுமார் ரகம். படத்தின் பின்பாதியில் யாரும் பேசாவிடினும், அயர்வு ஏற்படுத்தாமல் கடக்கின்றது. பின்னணி இசை நன்று. பாடல்களில், 'காதல் அரையைத்' தவிர மற்ற எதுவும் மனதில் சிவக்கவில்லை. கற்பனைக் கதையில் காமடி ரசம் பிழிந்து, கொஞ்சம் கருத்துச் செர்ரி வைத்திருக்கிறார்கள். நல்ல முயற்சி இருப்பினும், அனைத்து மக்களுக்கும் இது பிடிக்குமா என்பது சந்தேகம். படம் 'கொஞ்சம் நீளம்' துல்கர் கொடுக்கும் ஜவ்வு மிட்டாய் போல. மத்தபடி குமுதா ஹாப்பி அண்ணாச்சி !!!

பிடித்தது:

  1. கற்பனை  
  2. நகைச்சுவை 
  3. கருத்து ( பேசுனா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும் )
  4. ஒளிப்பதிவு 
  5. எடிட்டிங் 
பிடிக்காதது:
  1. திரைக்கதை நீளம் 
  2. பாடல்கள் 
டம் முடிந்த பின்பு, தாங்கள் தங்கள் வாழ்வில் கொஞ்சம் யோசித்து உங்கள் மனதில் பட்டதை சமரசம் செய்து கொள்ளாமல் தைரியமாக செய்தால் அதுவே படத்தின் வெற்றி. மொத்தத்தில் வாயை மூடி பேசவும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும் வைப்புகள் அதிகம் உள்ள படம்.

எனது மதிப்பீடு - 3.5/5 

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Friday, January 31, 2014

சையத் என்னும் நண்பன் !!!




 சில மனிதர்களின் உணர்வுகள் நம்முள் மிகப்பெரிய ஆச்சரியங்களை விதைத்துச் செல்லும். சில முகங்கள் நம்முள் புதைந்துக் கிடக்கும் பரவசங்களை மீட்டுத் தரும். சில நிகழ்வுகள் ‘நட்பு’ என்னும் ஒரு சொல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டும். இப்படி சில, இன்னும் பல, ரகசியங்களை, அதியசங்களை தன்னுள் பூட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞனை இசையின் மடியில் கண்டத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கூடுதல் பொறாமை.

வன் ராகங்களைக் கரைத்துக் குடித்தவன் என நான் சொல்லவில்லை; ராகங்களின் இடையே புது ராகம் தேடி, உணர்வால் வருடி, நம்மை மனதால் சிரிக்கவும், அழவும் செய்ய வைக்கத் தெரிந்த, மதம் மாறிய குழல் ஊதும் கண்ணன். போராடி பெரும் வெற்றி தான் நிரந்தரம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்னும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். காலம் காத்திருக்கிறது, இவன் சரித்திரத்தை கடல் நீர் கொண்டு வானில் எழுத! எனக்கு ஒரே ஒரு ஐயம் நீர் வற்றிப்போனால் என் செய்யும் இந்தக் காலம். கவலை வேண்டாம், என் உதிரம் ஒரு துளி போதும் வானம் தீர்ந்து போகும். இது நான் என் மேல் கொண்ட கர்வத்தின் கூப்பாடு அல்ல. இவன் இசையோசை என்னுள் மீட்டிய நட்பின் வெளிப்பாடு.

சையத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
(இவை யாவும் எனது சொந்த கருத்துக்களே; இது மற்ற போட்டியாளர்களின் மனங்களைக் காயப்படுத்தும் நோக்கில் கூறப்படுபவை அல்ல.)
·         தான் வெற்றி பெறாவிட்டாலும், தன் நண்பன் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என சிந்திய கண்ணீர்த்துளிகளுக்காக.
·         வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாகப் பாவிக்கும் சலனமற்ற உள்ளத்திற்காக.
·         இன்னும் இந்த குரல், பல மாற்றங்களை இந்த உலகில் உருவாக்க வேண்டும் என்பதற்காக.
·         தன்னுடைய சந்தோசத்தை பார்க்கும் மனிதர்கள் தோறும் அப்பிச்செல்லும் காரணத்திற்காக.
·         கடைசியாக, தனிமை விரும்பும் ஒரு மனிதனை, அவன் வட்டத்தில் இருந்து விடுவிப்பதற்காக !

சையத்திற்கு வாக்களிக்க www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லது SS04 என டைப் செய்து 57827 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம். வருங்கால இசை உலகம் உங்கள் கையில். வாய்ப்பளியுங்கள் ; அவன் நம்மை மகிழ்விப்பான்.

பின் குறிப்பு : அன்பின் மிகுதியால், நட்பின் மொழி கொண்டு ‘அவன் இவன்’ என நான் பயன்படுத்திருக்கிறேன். யாரேனும் என் கூர் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முகப்புத்தக முகவரி : Syed Subahan
யூடியூப் பதிவுகள்: SS04 Syed Singing Collections 

உங்கள் வாழ்த்துக்களையும் வாக்குகளையும் , என் நண்பன் திறமையானவன் என தாங்கள் கருதினால் வழங்குங்கள்.

அன்புடன்
சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 
Related Posts Plugin for WordPress, Blogger...