Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும் - விமர்சனம்


னாதை ஆசிரமத்தில் வளர்ந்து, பெரியவனாகி, முகத்தில் புன்னகையும், பேச்சில் மயக்கும் வித்தையையும் கொண்ட 'பிக்ஸ் இட்' நிறுவனத்தின் சேல்ஸ் ரெப்  அரவிந்த் ( அறிமுகம் துல்கர் - நடிகர் மம்முட்டியின் மகன்)  உடைந்ததை எல்லாம் ஒட்ட வைக்கின்றார் உறவுகள் உட்பட. இவரே கதையின் நாயகன். பார்க்கும் பட்சத்தில் ஒட்டிக் கொள்ளும் முகபாவம், நடிப்பு, மென்மை துல்கருக்கு. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்வரவு.

முகத்தில் மெல்லிய சோகம் இலையாட, காதலனின் விருப்பங்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளும், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே முடங்கிக்கொள்ளும், அப்பாவின் இரண்டாம் திருமணத்தை அங்கீகரித்தும், அதனை தன் மனம் ஏற்க முடியாமல், இறந்த தன் தாயில் நினைவுகளோடு வாழ  ஏங்கும் பனிமலை அரசு மருத்துவமனையின் இளம் மருத்துவர் அஞ்சனா, கதையின் நாயகி. ( நஸ்ரியா )

ஸ்ரியாவின் சித்தியாக, எழுத்தாளராக மதுபாலா, சுகாதரத் துறை அமைச்சராக பாண்டியராஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் சங்கத் தலைவராக ரோபோ சங்கர், துல்கரின் நண்பன் அர்ஜுனன், அமைச்சரின் பி.ஏ வாக காளி, ஆசிரம இடத்தின் உரிமையாளராக வினுச்சக்கரவர்த்தி, நியூக்கிளியர் ஸ்டாராக ஜான் விஜய்,   ரேடியோ ஜாக்கி பாலாஜி, அப்புறம் முக்கியமாக, ப்ரைம் டிவியின் செய்தி வாசிப்பாளராக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இன்னும் பலர் இணைத்து கலந்து கட்டிய காமெடி மற்றும் கொஞ்சம் கருத்து நிறைந்த படமே வாயை மூடி பேசவும்.

னிமைலையை  "டம்ப் ஃப்ளு" என்ற வியாதி தாக்குகிறது. அது என்ன, எப்படி பரவுகிறது, எப்படி அதைத் தடுப்பது என ஒரு டாக்டர் கணக்காக அவர்களே சொல்லிவிடுகின்றனர். அதலால், நாம் யாரும் பயப்படத் தேவையில்லை. அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை யாரும் யாருடனும் பேச கூடாது எனும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏனெலில் அது பேசுவது மூலம் தான் பரவுமாம். இத்தகைய சூழலில், ஆர்.ஜே வாகத் துடிக்கும் துல்கர், தன் காதலை பிடிக்க வில்லை என சொல்லத் துடிக்கும் நஸ்ரியா மற்றும் பலரின் சூழ்நிலை என்னாகிறது என்பதே படத்தின் சுருக்கக் கதை.

காமெடி கலாட்டாவிற்கு ரோபோ உத்திரவாதம். 'விஸ்வரூப' விவகாரத்தை எடுத்துக் கலந்து கட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் முன் பாதி சுமார் ரகம். படத்தின் பின்பாதியில் யாரும் பேசாவிடினும், அயர்வு ஏற்படுத்தாமல் கடக்கின்றது. பின்னணி இசை நன்று. பாடல்களில், 'காதல் அரையைத்' தவிர மற்ற எதுவும் மனதில் சிவக்கவில்லை. கற்பனைக் கதையில் காமடி ரசம் பிழிந்து, கொஞ்சம் கருத்துச் செர்ரி வைத்திருக்கிறார்கள். நல்ல முயற்சி இருப்பினும், அனைத்து மக்களுக்கும் இது பிடிக்குமா என்பது சந்தேகம். படம் 'கொஞ்சம் நீளம்' துல்கர் கொடுக்கும் ஜவ்வு மிட்டாய் போல. மத்தபடி குமுதா ஹாப்பி அண்ணாச்சி !!!

பிடித்தது:

  1. கற்பனை  
  2. நகைச்சுவை 
  3. கருத்து ( பேசுனா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும் )
  4. ஒளிப்பதிவு 
  5. எடிட்டிங் 
பிடிக்காதது:
  1. திரைக்கதை நீளம் 
  2. பாடல்கள் 
டம் முடிந்த பின்பு, தாங்கள் தங்கள் வாழ்வில் கொஞ்சம் யோசித்து உங்கள் மனதில் பட்டதை சமரசம் செய்து கொள்ளாமல் தைரியமாக செய்தால் அதுவே படத்தின் வெற்றி. மொத்தத்தில் வாயை மூடி பேசவும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும் வைப்புகள் அதிகம் உள்ள படம்.

எனது மதிப்பீடு - 3.5/5 

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Friday, January 31, 2014

சையத் என்னும் நண்பன் !!!




 சில மனிதர்களின் உணர்வுகள் நம்முள் மிகப்பெரிய ஆச்சரியங்களை விதைத்துச் செல்லும். சில முகங்கள் நம்முள் புதைந்துக் கிடக்கும் பரவசங்களை மீட்டுத் தரும். சில நிகழ்வுகள் ‘நட்பு’ என்னும் ஒரு சொல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டும். இப்படி சில, இன்னும் பல, ரகசியங்களை, அதியசங்களை தன்னுள் பூட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞனை இசையின் மடியில் கண்டத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கூடுதல் பொறாமை.

வன் ராகங்களைக் கரைத்துக் குடித்தவன் என நான் சொல்லவில்லை; ராகங்களின் இடையே புது ராகம் தேடி, உணர்வால் வருடி, நம்மை மனதால் சிரிக்கவும், அழவும் செய்ய வைக்கத் தெரிந்த, மதம் மாறிய குழல் ஊதும் கண்ணன். போராடி பெரும் வெற்றி தான் நிரந்தரம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்னும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். காலம் காத்திருக்கிறது, இவன் சரித்திரத்தை கடல் நீர் கொண்டு வானில் எழுத! எனக்கு ஒரே ஒரு ஐயம் நீர் வற்றிப்போனால் என் செய்யும் இந்தக் காலம். கவலை வேண்டாம், என் உதிரம் ஒரு துளி போதும் வானம் தீர்ந்து போகும். இது நான் என் மேல் கொண்ட கர்வத்தின் கூப்பாடு அல்ல. இவன் இசையோசை என்னுள் மீட்டிய நட்பின் வெளிப்பாடு.

சையத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
(இவை யாவும் எனது சொந்த கருத்துக்களே; இது மற்ற போட்டியாளர்களின் மனங்களைக் காயப்படுத்தும் நோக்கில் கூறப்படுபவை அல்ல.)
·         தான் வெற்றி பெறாவிட்டாலும், தன் நண்பன் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என சிந்திய கண்ணீர்த்துளிகளுக்காக.
·         வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாகப் பாவிக்கும் சலனமற்ற உள்ளத்திற்காக.
·         இன்னும் இந்த குரல், பல மாற்றங்களை இந்த உலகில் உருவாக்க வேண்டும் என்பதற்காக.
·         தன்னுடைய சந்தோசத்தை பார்க்கும் மனிதர்கள் தோறும் அப்பிச்செல்லும் காரணத்திற்காக.
·         கடைசியாக, தனிமை விரும்பும் ஒரு மனிதனை, அவன் வட்டத்தில் இருந்து விடுவிப்பதற்காக !

சையத்திற்கு வாக்களிக்க www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லது SS04 என டைப் செய்து 57827 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம். வருங்கால இசை உலகம் உங்கள் கையில். வாய்ப்பளியுங்கள் ; அவன் நம்மை மகிழ்விப்பான்.

பின் குறிப்பு : அன்பின் மிகுதியால், நட்பின் மொழி கொண்டு ‘அவன் இவன்’ என நான் பயன்படுத்திருக்கிறேன். யாரேனும் என் கூர் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முகப்புத்தக முகவரி : Syed Subahan
யூடியூப் பதிவுகள்: SS04 Syed Singing Collections 

உங்கள் வாழ்த்துக்களையும் வாக்குகளையும் , என் நண்பன் திறமையானவன் என தாங்கள் கருதினால் வழங்குங்கள்.

அன்புடன்
சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 

Tuesday, August 20, 2013

நம்ம திருச்சி !

http://www.123photography.co.uk

குறிப்பு : இப்பாடலைத் தன்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட 'நம்ம திருச்சி' நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

வாடா மச்சி ! – இது
நம்ம திருச்சி
வாடா மச்சி ! மச்சி ! – இது
நம்ம திருச்சி.

சோழனுக்கு சோறு போட்ட உறையூரு – இங்கு
சொல்லாம கொல்லாம கிடக்குது பாரு.
சத்தம் எங்கும் ஏறிப்போச்சு தமிழ்நாட்டுல – நீ
சந்தோசமா வாழலாம் எங்க ஊருல .

தீவு போல இருக்குது பார் ஸ்ரீரங்கம் – இது
காவிரியும் கொள்ளிடமும் கொஞ்சும் இடம்.
ஒரு முறை ஏறி வாடா மலைக்கோட்டை – உன்
உச்சி முதல் பாதம் வரை ஆயுள் ரேகை !

ங்க ஊரு தி-நகரு தில்லைநகரு – இங்கு
ஏராளமா கொட்டிக்கிடக்கு ரொம்ப பிகரு.
பொண்ணுங்க பப்புல மப்புல திரிவதில்லை – நீ
கைநீட்டிக் கூப்பிட இது சென்னையில்லை!

காந்தி வந்து தொறந்து வச்ச மார்கெட்டு – இங்கு
காணும் முகம் ஒவ்வொன்னிலும் கலாம் லுக்கு.
சுஜாதா, வாலியெல்லாம் நம்ப ஊருட – இவங்கள
படிக்காதவன் மனுசனில்லை நீயும் கேளுடா !
 
-சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100

Friday, July 19, 2013

வாலி நீர் வாழி !


Photo Courtesy : Google

ங்கே
கவிதைப்புத்தகங்கள் கிழித்தெறியப்படுகின்றன.
கவிஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
கவிஞிகள் கற்பு அழிக்கப்படுகிறது.
முடமாய்த் தமிழ் திரிகிறாள்.
முண்டாசுக்கவி மூக்கு சிந்துகிறான்.
திருவரங்கம் காவிரிக்குள் மூழ்குகிறது.
வெற்றிலைப் பாக்கு இரத்தம் சிந்துகிறது.
வாலி கொலை செய்யப்படுகிறார்.

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, May 29, 2013

மாடர்ன் தத்துவப் பாடல் !






குறிப்பு : இந்த பாடல் (?) 'இளையதலைமுறை' STUGAZINE இரண்டாவது செய்திமடலுக்காக எழுதிய தத்துவப்பாடல் !!! ??? செய்தி மடலைத் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும். இளையதலைமுறை அரசு சாரா பொது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.



பல்லவி:
ட இங்க பாரு ! அங்க பாரு !
இவன பாரு ! அவன பாரு !
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு மாப்புள  - நீ
சொந்தமா சிந்திச்சிடு கொஞ்சம் கேப்புல.

சரணம்:1
காந்தி போல வாழ்ந்த காலம் போயே போச்சு  - நீ
கேட்ஸ் அ போல அழுத்தி பாரு கணினி மௌசு.
ஆமை முயல் காலமெல்லாம் மாறிப் போச்சு - இங்கே
பத்து முயல் ஓடுது பாரு - ஓடு பாஸு !

சரணம்:2
சிரிச்சு பேசும் மனசுக்குள்ள ஆயிரம் தூசு  - நீ
சிந்திக்காம பேசிட்டீனா போயிடும் மவுசு.
அம்மா அப்பா வாத்தியாரு கடவுளு தாண்டா - உனக்கு
கஷ்டம் வந்தா வந்து நின்னா நண்பேன் தாண்டா !

சரணம்:3
ண்ணு முழி பிதுங்க நீயும் படிப்ப புக்ஸு - அட
கண்ண நீயும் தொறந்து வச்சா உலகமே புக்கு !  - நீ
காசு பணம் வச்சிருந்தா கடவுளு இல்ல - மனுஷ பய
கண்ணீர தொடச்சு விட்டா மரணமே இல்ல !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...