Friday, January 31, 2014

சையத் என்னும் நண்பன் !!!




 சில மனிதர்களின் உணர்வுகள் நம்முள் மிகப்பெரிய ஆச்சரியங்களை விதைத்துச் செல்லும். சில முகங்கள் நம்முள் புதைந்துக் கிடக்கும் பரவசங்களை மீட்டுத் தரும். சில நிகழ்வுகள் ‘நட்பு’ என்னும் ஒரு சொல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டும். இப்படி சில, இன்னும் பல, ரகசியங்களை, அதியசங்களை தன்னுள் பூட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞனை இசையின் மடியில் கண்டத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கூடுதல் பொறாமை.

வன் ராகங்களைக் கரைத்துக் குடித்தவன் என நான் சொல்லவில்லை; ராகங்களின் இடையே புது ராகம் தேடி, உணர்வால் வருடி, நம்மை மனதால் சிரிக்கவும், அழவும் செய்ய வைக்கத் தெரிந்த, மதம் மாறிய குழல் ஊதும் கண்ணன். போராடி பெரும் வெற்றி தான் நிரந்தரம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்னும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். காலம் காத்திருக்கிறது, இவன் சரித்திரத்தை கடல் நீர் கொண்டு வானில் எழுத! எனக்கு ஒரே ஒரு ஐயம் நீர் வற்றிப்போனால் என் செய்யும் இந்தக் காலம். கவலை வேண்டாம், என் உதிரம் ஒரு துளி போதும் வானம் தீர்ந்து போகும். இது நான் என் மேல் கொண்ட கர்வத்தின் கூப்பாடு அல்ல. இவன் இசையோசை என்னுள் மீட்டிய நட்பின் வெளிப்பாடு.

சையத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
(இவை யாவும் எனது சொந்த கருத்துக்களே; இது மற்ற போட்டியாளர்களின் மனங்களைக் காயப்படுத்தும் நோக்கில் கூறப்படுபவை அல்ல.)
·         தான் வெற்றி பெறாவிட்டாலும், தன் நண்பன் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என சிந்திய கண்ணீர்த்துளிகளுக்காக.
·         வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாகப் பாவிக்கும் சலனமற்ற உள்ளத்திற்காக.
·         இன்னும் இந்த குரல், பல மாற்றங்களை இந்த உலகில் உருவாக்க வேண்டும் என்பதற்காக.
·         தன்னுடைய சந்தோசத்தை பார்க்கும் மனிதர்கள் தோறும் அப்பிச்செல்லும் காரணத்திற்காக.
·         கடைசியாக, தனிமை விரும்பும் ஒரு மனிதனை, அவன் வட்டத்தில் இருந்து விடுவிப்பதற்காக !

சையத்திற்கு வாக்களிக்க www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லது SS04 என டைப் செய்து 57827 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம். வருங்கால இசை உலகம் உங்கள் கையில். வாய்ப்பளியுங்கள் ; அவன் நம்மை மகிழ்விப்பான்.

பின் குறிப்பு : அன்பின் மிகுதியால், நட்பின் மொழி கொண்டு ‘அவன் இவன்’ என நான் பயன்படுத்திருக்கிறேன். யாரேனும் என் கூர் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முகப்புத்தக முகவரி : Syed Subahan
யூடியூப் பதிவுகள்: SS04 Syed Singing Collections 

உங்கள் வாழ்த்துக்களையும் வாக்குகளையும் , என் நண்பன் திறமையானவன் என தாங்கள் கருதினால் வழங்குங்கள்.

அன்புடன்
சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 

Tuesday, August 20, 2013

நம்ம திருச்சி !

http://www.123photography.co.uk

குறிப்பு : இப்பாடலைத் தன்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட 'நம்ம திருச்சி' நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

வாடா மச்சி ! – இது
நம்ம திருச்சி
வாடா மச்சி ! மச்சி ! – இது
நம்ம திருச்சி.

சோழனுக்கு சோறு போட்ட உறையூரு – இங்கு
சொல்லாம கொல்லாம கிடக்குது பாரு.
சத்தம் எங்கும் ஏறிப்போச்சு தமிழ்நாட்டுல – நீ
சந்தோசமா வாழலாம் எங்க ஊருல .

தீவு போல இருக்குது பார் ஸ்ரீரங்கம் – இது
காவிரியும் கொள்ளிடமும் கொஞ்சும் இடம்.
ஒரு முறை ஏறி வாடா மலைக்கோட்டை – உன்
உச்சி முதல் பாதம் வரை ஆயுள் ரேகை !

ங்க ஊரு தி-நகரு தில்லைநகரு – இங்கு
ஏராளமா கொட்டிக்கிடக்கு ரொம்ப பிகரு.
பொண்ணுங்க பப்புல மப்புல திரிவதில்லை – நீ
கைநீட்டிக் கூப்பிட இது சென்னையில்லை!

காந்தி வந்து தொறந்து வச்ச மார்கெட்டு – இங்கு
காணும் முகம் ஒவ்வொன்னிலும் கலாம் லுக்கு.
சுஜாதா, வாலியெல்லாம் நம்ப ஊருட – இவங்கள
படிக்காதவன் மனுசனில்லை நீயும் கேளுடா !
 
-சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100

Friday, July 19, 2013

வாலி நீர் வாழி !


Photo Courtesy : Google

ங்கே
கவிதைப்புத்தகங்கள் கிழித்தெறியப்படுகின்றன.
கவிஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
கவிஞிகள் கற்பு அழிக்கப்படுகிறது.
முடமாய்த் தமிழ் திரிகிறாள்.
முண்டாசுக்கவி மூக்கு சிந்துகிறான்.
திருவரங்கம் காவிரிக்குள் மூழ்குகிறது.
வெற்றிலைப் பாக்கு இரத்தம் சிந்துகிறது.
வாலி கொலை செய்யப்படுகிறார்.

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, May 29, 2013

மாடர்ன் தத்துவப் பாடல் !






குறிப்பு : இந்த பாடல் (?) 'இளையதலைமுறை' STUGAZINE இரண்டாவது செய்திமடலுக்காக எழுதிய தத்துவப்பாடல் !!! ??? செய்தி மடலைத் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும். இளையதலைமுறை அரசு சாரா பொது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.



பல்லவி:
ட இங்க பாரு ! அங்க பாரு !
இவன பாரு ! அவன பாரு !
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு மாப்புள  - நீ
சொந்தமா சிந்திச்சிடு கொஞ்சம் கேப்புல.

சரணம்:1
காந்தி போல வாழ்ந்த காலம் போயே போச்சு  - நீ
கேட்ஸ் அ போல அழுத்தி பாரு கணினி மௌசு.
ஆமை முயல் காலமெல்லாம் மாறிப் போச்சு - இங்கே
பத்து முயல் ஓடுது பாரு - ஓடு பாஸு !

சரணம்:2
சிரிச்சு பேசும் மனசுக்குள்ள ஆயிரம் தூசு  - நீ
சிந்திக்காம பேசிட்டீனா போயிடும் மவுசு.
அம்மா அப்பா வாத்தியாரு கடவுளு தாண்டா - உனக்கு
கஷ்டம் வந்தா வந்து நின்னா நண்பேன் தாண்டா !

சரணம்:3
ண்ணு முழி பிதுங்க நீயும் படிப்ப புக்ஸு - அட
கண்ண நீயும் தொறந்து வச்சா உலகமே புக்கு !  - நீ
காசு பணம் வச்சிருந்தா கடவுளு இல்ல - மனுஷ பய
கண்ணீர தொடச்சு விட்டா மரணமே இல்ல !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, May 3, 2013

பெர்பெக்ட் பெண்ணே !

© www.tumblr.com




 குறிப்பு : சில சமயம் என்ன தான் நாம் மாங்கு மாங்கு என்று யோசித்து வெண்பா, கலிப்பா , வஞ்சிப்பா என எல்லாம் கரைத்து எழுதினாலும் அது ஹிட் அடிப்பதில்லை. கொஞ்சம் லோக்கலாக 'ஒய் திஸ் கொலவெறி' போல் எழுதினால் தான் நம்மையும் கவிஞர் என இந்த தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்கிறது. மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே ! இது குறித்த எனது அறிவுக்கண்ணை திறந்து வைத்த நண்பன் பிரவீன் அவர்களுக்கு இக் கவிதை(?) சமர்ப்பணம். இதனை ஒரு பாடலாக வடிவமைத்துத் தராமல் காலந்தாழ்த்தும் அன்பு நண்பர், இசை வித்தகர், 'கசப்பு இனிப்பு', 'தி லாஸ்ட் பாரடைஸ்' போன்ற ஹிட் அடித்த குறும்படங்களுக்கு இசை அமைத்த திரு.உமாசங்கர் அவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். மேலும் நீங்கள் , சூப்பர் சிங்கர் கனவின் முதல் கட்டமான பாத்ரூம் சிங்கர் பதவியில் தற்பொழுது இருந்தால், இப்பாடலை ஆண்ட்ரியா பாடிய  ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' படத்தின் ப்ரோமோ பாடல், ' க்ரேசி மின்னல்' பாடலோடு பொருத்திப் பாடி மகிழலாம். இப்பாடல் கண்டு சமீப கால தனுஷ் போன்ற  கவிஞர்கள் கோபம் கொண்டால், என்னை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


பெர்பெக்ட் பெண்ணே
பைத்தியம் நானே
உன்னாலே சுத்தி சுத்தி
காதல் கிறுக்கன் ஆனேன் !

ன் விழி ஓரம்
ஒரு துளி கண்டேன்
கண்ணீரா கவிதையா
குழம்பி நானும் நின்றேன்.

நீ செல்லும் ஸ்கூட்டி தனில்
நானும் சேர வேண்டும்
சொர்க்கங்கள் திருமணங்கள்
அங்கு நிச்சயம் ஆகும்

நீ போடும் சட்டை கலரில்
நானும் சட்டை போட்டேன்
சண்டைகள் போதும் அன்பே - நீ
காதல் செய்ய வேண்டும்

காபிஷாப்பில்  க்ரீடிங் கொடுத்தேன்
பஸ்ஸ்டாப்பில் தினமும் பட்ரோஸ் கொடுத்தேன்
பர்த்டே எல்லாம் பரிசுகள் கொடுத்தேன்
பாரின் சரக்கும் உனக்காக தவிர்த்தேன்.

பெர்பெக்ட்பெண்ணே
பைத்தியம் நானே
பாரடி! பேசடி!
பாவம் நானும் தானடி!
பிரெண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ணி விட்டேன் - உன்னோட
பிரெண்ட்சை நானும் மதிக்க கற்றேன்
ஜாக்கி தெரியும் பேண்டை வெறுத்தேன்
சாமியார் போல உன் சரணம் படித்தேன்.

ங்கேயோ கிடந்த என் கைபேசி எல்லாம்
பாக்கெட்டை விட்டு எங்கும் நகருவதில்லை
சாரி பலவும் லவ் யூ சிலவும
டெம்ப்லேட்டில் தினமும் உனக்காக சேர்த்தேன்

காதல் கலவும்
காயம் தரவும்
காதல் இதுவா - என
கண்கலங்கி நின்றேன்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...