Sunday, October 16, 2011

மருத்துவக்கல்லூரி மர்மங்கள் !

 
" மருத்துவமனைகளெல்லாம்
மரணத்திற்கு எதிராக பொய்யாகவே போராடிக்கொண்டிருக்கின்றன! "

வைரமுத்துவின் ஆழமான வரிகள்; உண்மை வரிகளும் கூட ! மருத்துவமனைகள் கோவிலாக போற்றப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், அதன் இன்றைய சூழலோ சற்று கேள்விக்குரியது தான். பணம் படைத்தவனுக்கு தனியார் மருத்துவமனைகள் எனவும், தினம் உழைப்பவனுக்கு அரசு மருத்துவமனைகள் எனவும் எழுதப்படாத சட்டம், நம் இந்திய திருநாட்டில் நடைமுறையில் உள்ளது, அதற்கு தமிழக மருத்துவமனைகள் மட்டும் விதிவிலக்கல்ல !

ரூ.400 கூட மாதச்சம்பளம் வாங்க முடியாத ஏழைத்தமிழனிடம் லஞ்சம் பிடுங்கப்படுகிறது நானூறுக்கும் மேலாக. இதைச் செய்பவர்கள் கல்லூரி முதல்வர்களோ, மருத்துவக் கண்காணிப்பாளர்களோ, துறைத்தலைவர்களோ அல்ல  தூக்குப்படுக்கைத் (Stretcher ) தள்ளுபவர்களும் சக்கர நாற்காலி ( Wheel Chair ) தள்ளுபவர்களுமான கடைநிலை ஊழியர்கள் (MNA - Male Nursing Assistant & FNA - Female Nursing Assistant ). தற்பொழுதைய நிலவரப்படி அவர்களின் விலைப்பட்டியல் இதோ உங்கள் முன்.

  • Stretcher அல்லது Wheel Chair  தள்ள - ரூ.450
  • Wound Dressing செய்ய - ரூ.50
  • இதர உதவிகளுக்கு - ரூ.50  முதல் ரூ.500 வரை .

ப்படியாக ஒரு நாளைக்கு தோராயகமாக பத்து நோயாளிகளை அறுவை அரங்கத்தில் இருந்து படுக்கை பிரிவிற்கு மாற்றுவதற்கு ரூ.4500 லஞ்சமாக வாங்கப்படுகிறது. அதோடு இவர்களுக்கு அரசு அளிக்கும் சம்பளம் ரூ.10 ,000க்கு மேல். மேலார்ந்த பெரியவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய சம்பள விவரங்கள்.
  • பயிற்சி மருத்துவரின் மாதச்சம்பளம் - ரூ.7400
  • முதுகலை மாணாக்கரின் மாதச்சம்பளம் - ரூ.30,000

டித்த மருத்துவர்களைக் காட்டிலும் இவர்களின் சம்பளமும், அதிகாரமும் அரசு மருத்துவமனைகளில் அதிகம் தான்.

ண்மையில் இரண்டு ஊழியர்களை ஏதோ ஒரு அரசு மருத்தவமனையில் லஞ்சம் வாங்கியதற்காக தற்காலிகமாக பணியில் இருந்து அக்கல்லூரியின் மருத்துவக்கண்காணிப்பாளர் நீக்கியுள்ளார். இது வரவேற்க வேண்டியது என்றாலும், இத்தகைய லஞ்சப்பேர்வழிகளைக் களைய மருத்துவமனைகள் யாதொரு நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது வருத்தமே !

குறைகளைக் கண்டுகொள்ள வேண்டிய நிர்வாகம் , காங்கிரஸ் ஆட்சி போல் மௌனம் காத்தால் மக்களின் நலம் தான் வீணாகும். இதில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அதோடு சற்று வருத்தமும் தருவது அந்த ஊழியர்கள் உபயோக்கிக்கும் வார்த்தைகள் ! நோயாளிகளின் உறவினர்களிடம் நோயாளிகளை அறுவை அரங்கத்திற்கு செல்லும் முன் காண்பித்து, " அங்க பார்தீங்கள ! ரெண்டு பெரிய டாக்டர் , ரெண்டு சின்ன டாக்டர் , ரெண்டு நர்ஸ் ... நீங்க தர காசு எல்லாம் இவங்களுக்கு தான் போகுது ! எல்லோரும் வாங்கின பிறகு எங்களுக்கு மிஞ்சுறது ஏதோ அஞ்சோ பத்தோ தான் ! " இதில் யார் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பது கூடவா தெரியாமல் சுழல்கிறது மருத்துவ உலகம்.

க்கள் சமுதாயத்தின்கண் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலமாகவும், அதிகாரம் பொருந்தியவர்கள் அடங்கி போகாமல் இருப்பதாலும் இதைக் களைய முடியும், கண்ணீரைத் துடைக்க இயலும். சிந்திக்க வேண்டியது நம் அனைவர் கைகளிலும் உள்ளது. இதனை எடுத்துரைக்க மருத்துவன் என்ற பட்டம் தேவையில்லை ; மனிதன் என்ற உணர்வு இருந்தால் போதும். விழித்திடு தமிழா !


" உயிரைக் காக்கும் உன்னத சாலையில்;
உழைப்பை உறுஞ்சும் ஊழல் வேர்கள். "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





Tuesday, October 11, 2011

நட்பின் புதைகுழியில் !



தேவதையே !
நட்புத் தாரகையே !
காதல் தேவையோ ? - பொய்க்
காதல் தேவையோ ?

ழியெங்கும் நட்பின் சருகுகள்
மனமெங்கும் மிதிக்கும் உணர்வுகள்.
விழியெங்கும் காதல் அரும்புகள்
தினந்தோறும் மலரும் கனவுகள்.

ட்பின் காகிதம் கொடுத்து
காதல் எழுதிக் கொண்டோம்.
நட்பின் விரல் பிடித்து
காதல் பழகிக் கொண்டோம்
நட்பின் மலர் கொடுத்து
காதல் தொடுத்துக் கொண்டோம்
நட்பின் கைக்குட்டை வாங்கி
காதல் துவட்டிக் கொண்டோம்.
நட்பைப் புதைத்து விட்டு
காதல் பெற்றுக் கொண்டோம்.


காதல் தோழியே !
நட்பு மழை தந்தது;
காதல் துளி தந்தது.
நட்பு வயல் தந்தது;
காதல் நெல் தந்தது.
நட்பு தாகம் தீர்த்தது;
காதல் தாகம் தந்தது.

நாம்
நட்பு கிழித்துக்
காதல் உடுத்திக் கொண்டோம்.
காதல் கிழித்துக்
காமம் உடுத்திக் கொள்வோம்.

நாம்
கண்ணீர் குடித்து
தாகம் தீர்த்துக் கொண்டோம்.
கண்ணை விற்று
காட்சி வாங்கி வருவோம்.

ம் தோழி !
நம்முள் காதல் பிறந்திருக்கிறது ;
காதல்
காமம்
காயம்
மூன்றும் முளைத்திருக்கிறது
நட்பின் புதைகுழியில் !!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Monday, October 10, 2011

என்றோ சிந்தித்தவைகள் !

  •  காதலில் அழகாய் தோன்றும் அத்துனை விசயங்களும் ... நட்பில் அபத்தமாய் காட்சியளிக்கிறது.
  • தீக்குளித்து தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பது அறிவாளிகளின் முட்டாள்தனம்; அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் .
  •  எல்லா பெண்களும் சுதாரிப்பு என்கிற பெயரில் " அண்ணா ! " என்று அழைக்கிறார்கள் . # இல்ல தெரியாமாத் தான் கேக்குறேன் நாங்க என்னிக்காவது உங்கள "அக்கா" னு கூப்பிட்டிருக்கோமா ?
  • நீண்ட நாளாக ஒரு சந்தேகம் ! அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ?
    # ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
  •  காதல் செய்யாதீர்கள்; மீறியும் காதல் செய்தால் காதலைக் கொலை செய்யாதீர்கள்
  • தனது தவறுகளை முழுவதுமாக மறைக்கத் தெரிந்தவன் அறிவுரைகள் சொல்கிறான்; தெரியாதவன் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிறான்.
  • இளமையைக் காட்டிலும் முதுமை அழகு. இளமையின் அழகு இருக்கும் வரை; முதுமையின் அழகு இறக்கும் வரை .
  • 'நான் அழகாக இல்லை' என என்னை பலர் விமர்சித்திருக்கிறார்கள் என மனம் நோகும் படி. அழகை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் விபச்சாரிகள் ; நான் விபச்சாரம் செய்ய விரும்பவில்லை.
  • மருத்துவர்களாகிய எங்களுக்கு மருந்துகளை மட்டுமே அறிமுகம் செய்கிறார்கள்; மனிதர்களின் உணர்வுகளை அறிமுகம் செய்ய மறந்து விடுகிறார்கள்.
  • புத்தகம் ஒன்று தான் ! ஆனால், வயதுக்கேற்ப அதன் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது.
  • உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ; உன்னையும் சேர்த்து ...
     
     - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
      

Saturday, October 8, 2011

பேருந்தில் தேவதை

Copyright : fotocommunity.com

பேருந்து நெரிசலில்
பக்கத்து இருக்கையில்
பளிச்சென்று தேவதை
பக்கத்தில் அவள் அன்னையோடு !

னியே சிரிக்கிறாள்
கேசம் கலைக்கிறாள்
கைநீட்டி அழைக்கிறாள்
மழலை மொழிகிறாள்
முத்தம் தருகிறாள்
கைபிடித்து இழுக்கிறாள்.

க்கம் பார்க்கிறாள்
கன்னத்தில் அறைகிறாள்
காதல் சொல்கிறாள்
கண்களில் கொல்கிறாள்

டைசியில் கேட்கிறாள் ...
" நான் UKG .... நீ ? "     


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, September 18, 2011

கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !

புத்தகம் 

Copyright : http://wallpaper4free.org

னக்கான வார்த்தைகள் மட்டும் சேர்த்து - ஒரு
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !

பசுமையாய் அவள்

Copyright : http://www.desktopwallpaperhd.net

காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் ! 


முதல் எழுத்து 

Copyright : besthomedecorators.com
யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.


ஒற்றை ரூபாய் 

Copyright : www.sparkthemagazine.com


ன்பே!
ஒற்றை ரூபாயாக 
உன் காதல் - நீ 
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது 
என் காதல்.

பின் குறிப்பு : * இத்தல் நிகழ்வு
                          ** இத்தல் நிகழ்வு.

உதடு 

Copyright : webs.com


ன்பே ! நீ 
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...