Showing posts with label Mumbai Terrorism. Show all posts
Showing posts with label Mumbai Terrorism. Show all posts

Friday, July 15, 2011

மும்பை தீவிரவாதம் - கசாப் தூக்கு - கண்ணீர்க் கவிதை

Photo Courtesy - medinab.blogspot.com


குறிப்பு : மும்பை குண்டுவெடிப்பில் உயிரிழந்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இக்கண்ணீர்க்கவிதை சமர்ப்பணம். அதோடு கசாபைத்  தூக்கிலிட்ட இத்தருணத்தில் இக்கவிதையை மறுபதிப்பு செய்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டுமானால் எனக்கு என்றுமே மரண தண்டனையில் உடன்பாடு இல்லை. அப்படி ஒருவனைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்றால் , இதுவரை தவறே செய்யாத ஒருவன் மூலம் அவனைத் தூக்கிலிடச் செய்யுங்கள்.


தீவிரவாதப் பேயடா ! - நீ
திருந்தும் வழியேதடா ?
தீர்க்கமாய் சொல்லி செல்லடா - இல்லை
திருகிக் குடிப்போம் உன் உயிரடா !

வெட்டி சாய்த்துவிட வேண்டுமடா - உன்
நெஞ்சில் ஈரம் பட்டு போய் விட்டதடா !
கண்ணீர்த்துளி கேட்கும் நரமாமிசா - உன்
கண்ணை வெட்டி நீயும் நீர் குடிடா !

யிரின் மகத்துவம் நீ பாரடா - உன்
உயிரைக் கொண்டு போராடடா !
வாதங்கள் செய்து வாழாதடா - உன்
தீவிர வாதங்கள் விழல் தானடா !

ழலைக் கொண்டாடும் தேசமடா - இது
உயிரைக் குடிக்கும் தேசமடா !
அரசியல் வணிகம் நடக்குதடா - தினமும்
அறிக்கை மட்டும் கேட்குதடா !

தவிகள் தந்தது மக்களடா
பாடையில் இருப்பதும் மக்களடா
உரிமைகள் தந்தது மக்களடா
உயிரைக் கொடுப்பதும் மக்களடா !

காந்தியம் பிறக்க மறந்ததடா - காந்தி
நோட்டுகள் பிணங்கள் கேட்குதடா !
சாந்திகள் இல்லா நாடடா - என்
சந்ததிக்கு ஏது வழியடா !

கிம்சை தந்த  நாடடா - அது
னுதினமும் அழுவது ஏனடா !
ஒருமுறை சிந்தித்து பாரடா - எங்கள்
உயிரைக் குடிப்பது ஏனடா !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 
Related Posts Plugin for WordPress, Blogger...