Showing posts with label Husband Feelings. Show all posts
Showing posts with label Husband Feelings. Show all posts

Sunday, December 23, 2012

என்னை மன்னிப்பாய் தானடி ?

Photo Courtesy : Wolfgang Lüpertz




முன் குறிப்பு : நேற்று இரவு twilight breaking dawn முதல் பகுதி பார்த்தேன் . பெல்லா எட்வர்டின் மகளைப் பிரசவிக்கும் காட்சி . அதில் என்னைப் பாதித்தது அவள் அல்ல அவன். 'மகளை விட மனைவி தான் வேண்டும்' என்னும் அவனுடைய தவிப்பு. ஆம், இப்படித்தானே ஒவ்வொவொரு கணவனும் ; ஆனால் அது பதிவு செய்யப்படாமலே இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. அதைத் தொடர்ந்தே இக்கவிதை. இது சிறப்பானதாக எனது மனம் கருதவில்லை ! இருக்கலாம் ; என் மகள் பிறக்கும் சமயத்தில் இக்கவிதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்படலாம் !



காதல் கடலில் நீராடி
காமக் கரை தொட்டு விட
கருவில் உதித்திட்டால் பௌர்ணமி
கண்மணியே - நீ சுகம் தானடி ?

வெயிற்கால மழைநாள் ஒன்றில்
வெட்கப்புன்னகை நீ சிந்த - எடுக்கச் சென்ற
 என்னிதழை எச்சில் படுத்தி சொன்னாயடி
என்னுயிரே - நீ நலம் தானடி ?

தேகமெல்லாம் நீ வாடும் போதும்
தென்றல் வந்து உன்னை தீண்டும் போதும்
தேகப்போர்வை நெய்வேனடி
தேவதையே - நீ சவுக்கியம் தானடி ?

மேடிட்ட வயிற்றில்
மெதுவாய் விரல் தீண்டி
முத்தமிட்டுச் சென்றேனடி
மென்பூவே - நீ பத்திரம் தானடி ?

லியோடு என் விரல் பிடிக்க
மழலையவள் மண் பிறக்க
செத்து விட்டேன் நானடி
செந்தாமரையே - என்னை மன்னிப்பாய் தானடி ?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...