Showing posts with label நட்புக் கவிதைகள். Show all posts
Showing posts with label நட்புக் கவிதைகள். Show all posts

Tuesday, April 16, 2013

நண்பனுக்காக !

Copyright : blog.hirschi.se

 குறிப்பு : இக்கவிதை என் பள்ளிகால தோழன் அருணனுக்காக எழுதப்பட்டது . இது தன் நண்பனைப் பற்றி கவிதை எழுத துடிக்கும் கவிஞனுக்கும் அவன் கைகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைக்கப்பட்டது. அவனுடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அதிகம் ஊர் சுற்றியதில்லை; அதிகம் பகிர்ந்ததில்லை; அதிகம் சண்டையிட்டதில்லை; இருப்பினும் ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போன்ற ஒரு நண்பன் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை.

யாராருக்கோ
கவிதை எழுதிய என்
கைகள் 
உனக்காக எனும் போது ...
சுருங்கிக் கொண்டது.

கேட்டேன் கைகளை ...
கேள்விக் கணைகளால்.

என் கணை செல்லும் முன்னே
மறு கணை வந்தது.

முதலில் என் கேள்விக்கு பதில் ...
கேள்!

கவிஞனுக்கு தற்பெருமை அழகா?
அசிங்கம்.

நீ கவிஞனா?
காலம் பதில் சொல்லும்.

யாருக்காக இந்த கவிதை?
நண்பனுக்காக.

பெயர்?
அருணன்.

அர்த்தம்?
சூரியன்.

எதற்காக இக்கவிதை?
பார்க்காத நான்
பார்ப்பதே அவன் எழுத்துக்கள் மட்டும் தான்
அந்த எழுத்துக்கள் பிறப்பதற்காக
என் எழுத்துக்கள்.

நண்பனென்றால்?
உயிர்.

உனக்கு?
எனக்கும் அப்படித்தான்.

செய்வாயா உன் நண்பன் சொல்வதை?
வீணான கேள்வி.

காரணம்?
உயிர் சொல்வதைத் தானே உடல் செய்யும்.

பிடித்தது?
யாரிடம்.

அவனிடம்?
மரியாதை ...

மன்னிக்கவும். அவரிடம்?
எல்லாம்.

பிடிக்காதது?
எல்லாம்.

உயிரைத் தருவாயா உன் நண்பனுக்காக?
உயிரே அவன் என்கிறேன்.

நட்பைப் பற்றி ஒரு கவிதை ?
அன்பைத் தருவாள் அன்னை
அனுபவம் தருவார் தந்தை
அறிவைத் தருவார் ஆசான்
உள்ளம் தருவாள் மனைவி
புகழைத் தருவான் பிள்ளை
இவை அனைத்தும் தருவான்
"நண்பன்"

நண்பனுக்காக?
வாழ்வேன்.

நண்பனில்லாமல்?
வீழ்வேன்.

உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
உலகில் தாழ்ந்தது  உன் கேள்வி.            

உன் கேள்வி?

ஏன் கவிதை எழுதாமல் சுருங்கினாய்?
மடையா!
உன் மனதில் உன் நண்பன்
அவன் மனதில் நீ !
இருவரும் ஒருவரே ..

உடலால் வேறுபட்டாலும் 
உள்ளத்தால் ஒருவரே !

சுற்றி வளைக்காதே ...
பதில் கூறு .

கடைசியாக ஒரு கேள்வி?
கேள்.

கவிதை தோன்றுமிடம்?
உள்ளம்.

உள்ளம் ஒன்று எனும் போது
உன் நண்பனை பற்றிய கவிதை என்பது...
உன்னைப் பற்றியாகாதா?
தற்பெருமை ஆகாதா?
கவிஞனுக்கு அழகா?
போதுமா விளக்கம்.

புரிந்தது .
மன்னித்து விடு.

என் வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு...
என் வணக்கங்கள் உங்கள் நட்பிற்கு.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, February 7, 2013

நட்புக்கீறல்


Copyright : liaschaf.blogspot.com




னக்கும் நண்பர்களுக்கும் சற்று நெருக்கம் அதிகம். அது போல் பிரிவும் அதிகம். பள்ளிக்காலம் தொட்டு இந்தப்  பருவக்காலம் வரை பல்லாயிரம் நண்பர்கள். வாழ்க்கையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒருவன். தமையன் என்ற போர்வைக்குள் ஒருவன். தப்பு செய்து பழகிய காலம் தொட்டு ஒருவன். என் தவறுக்கு தண்டனையாக இன்று வரை மௌனத்தைப் பரிசளிக்கும் ஒருவன். முகப்புத்தகத்தில் நலம் விசாரிக்கும் ஒருவன். ஸ்கைப் மூலம் என் நேசம் தொடும் ஒருவன். பார்த்தால் மட்டும் சிரிக்கும் ஒருவன். என் நட்பை நிராகரித்த ஒருவன் என பல பல ஒருவன்களால் இந்த சிறுவனின் உலகம் படைக்கப்பட்டுள்ளது. அசார், காளி, டேவிட் என மதம் தாண்டிய எனது நட்புலகத்தை விரித்தது இந்த முகப்புத்தகமும் வலைப்பூவும் தான். நட்பின் வலியால் வாழும் என்னை சில வாரங்களாக ஆத்மார்த்தியின் நட்பாட்டம் என்னையும் கொஞ்சம் ஆடச்செய்தது. அந்த ஆட்டம் உங்கள் பார்வைக்கு !



வன் அவள்
இவன் இவள் ஆக
இவனை இம்சிக்கிறது
நட்பு.


ல நாள் பேசாவிடினும்
நட்பு நட்புதான் !
ஒரு நாள் பேசாவிடின் 
காதல் ?

காதல் வலி
கண் மருந்து
நட்பு வலி
நானே மருந்து.


ட்பினை சுவைத்து
காதல் வளர்கிறது;
காதலைச் சுவைத்து
நட்பு வளர்வதில்லை.


ச்சில் பார்க்காத
என் உறவு
நட்பு. 


டை கலைத்தும்
நட்பு தூங்கும்.
காதல் மட்டும்
காமம் தேடும். 

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Monday, May 9, 2011

இது நம்ம பாட்டு தான் !

Photo Courtesy : Sathyaseelan Rajendran


குறிப்பு : கொஞ்சம் வித்தியாசமான நேரத்துல தான் இந்த கவிதை எழுதுற சூழல் எனக்கு வந்துச்சு. எங்க Batch Day ... எப்பொழுதும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம்னு யோசிச்சோம் . சரி ஒரு பாட்டு compose பண்ணுனா என்னான்னு தொன்றிணப்ப தான் ... இந்த வரிகள் . உங்க Mind Voice எனக்கு புரியுது ! எதுப்பா ? உங்க Batch அப்படின்னு தானே கேக்குறீங்க ! என்னோடது 2006 Batch of Thanjavur Medical College. And I am proud to Say My Batch name ... Ya We are VALIANTZ .


ட்பென்னும் வலையைப் பிண்ணிகொண்டோம்
நட்புக்குள் நாங்கள் மாட்டிக் கொண்டோம்
நட்பாலே நாங்கள் வாழுகின்றோம் - எங்கள்
நட்பாலே பிறரை வாழ வைப்போம்.

ட்புக்கு அகராதி நாங்கள் தானே !
கர்ணனும் எங்கள் சீடன் தானே !
நட்பிற்கு தாஜ்மஹால் கட்டிவிட்டோம் - எங்கள்
கல்லூரி கற்களிலே கலந்து விட்டோம்.

சோகங்கள் கண்ணில் மழை பொழியும் - நண்பன்
கைவிரல் தானே துடைத்துவிடும்;
வெற்றிகள் தலையில் ஏறிக்கொள்ளும் - நண்பன்
குட்டுகள் தானே இறக்கி வைக்கும்.

னவுகள் மட்டும் காண மாட்டோம் - பலர்
கனவுகள் கனிந்திட வழிவகுப்போம்.
மருத்துவம் மட்டும் பார்க்க மாட்டோம் - பலர்
மனங்களில் மகனாய்/மகளாய் வாழ்ந்திடுவோம்.

ட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எந்நாளும் மாறாது இந்தக் கூட்டம்.




-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, May 7, 2011

உன்னைப் பற்றி ...

Copyright : Ganesamoorthy


குறிப்பு - இது என் பள்ளிக் கால நண்பன் கணேசமூர்த்திக்காக நான் 12 வகுப்பு படிக்கையில் எழுதப்பட்டது ! இக் கவிதையை அவனுக்காக மட்டும் அல்ல இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் , என் நட்பை நேசிக்கும் அனைவருக்கும்  சமர்ப்பணம். கல்லூரிப் பெண்கள் கவனத்திற்கு 'HE IS STILL SINGLE' !

ழகின் 
அகராதி

நட்பின்
இமயம்

புறத்தால்
கெட்டவன்

மனத்தால்
தூயவன்

படிப்பில்
பரவாயில்லை

நடிப்பில்
நடிகர் திலகம்

துடிப்பில்
இதயம்

பழகுவதில்
பால்

விலகுவதில்
விலாங்கு

பிடித்தது
காதல்

பிடிக்காதது
துரோகம்

புரிவது
பாசம்

புரியாதது
பாடம்

ஆடைகளில்
ஆணழகன்

இல்லாமல்
பேரழகன்

பேச்சில்
கனிவு

பாட்டில் 
தெளிவு                              

வீட்டில் 
நல்லபிள்ளை

விடுதியில்
கெட்டபிள்ளை      

இன்னும் சொல்ல 
என்னிடம் வார்த்தையில்லை
ஏன்?
தமிழிளுமே வார்த்தையில்லை .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Related Posts Plugin for WordPress, Blogger...