Saturday, December 29, 2012

டெல்லியும் சில நாய்களும் :(

Copyright : worth1000.com

லகம் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றது. 'இந்தியா' மட்டும் தான் தவறுகளை சமூகத்தின் கண்களிலிருந்து மறைப்பதில் முனைப்புடன் இருக்கிறது. நான் இதைப் பற்றி எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன். மனம் கனத்தது. ஆதலால் ...


"வர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்; அவள் இந்தியாவின் மகள்; என்ன செய்கிறோம் நாம் ; அரசாங்கம் தூங்குகிறதா ? " என கூச்சலிடும் சமூகமே ! உன்னிடம் ஒரேயொரு கேள்வி . இதன் அடிப்படை யது என தெரியுமா ?

  1. பாரம்பரியத்தில் வாழ்ந்து வந்த இந்தியாவில் பப்புகளும், பகட்டு வாழ்கையும் செய்த புரட்சி பணம் மட்டுமல்ல ; பாலியல் பலாத்காரங்களும் தான்.
  2. நீ ஊரைத் திருத்த வேண்டாம்; உன் வீட்டில் உள்ள உன் தந்தையை, தமயனை, கணவனை, மகனை, நண்பனைத்  திருத்து; தவறுகள் குறையும். கருப்பு பக்கங்கள் இல்லாத மனிதன் மிகக் குறைவு.
  3. இலங்கைப் பிரச்சனைக்கண் ஏற்பட்ட வலிகளை இதனோடு ஒப்பிட்டு சில நண்பர்கள் வினவியிருந்தார்கள். இரண்டுமே உயிர் தான் ; இரண்டுமே உணர்வுகள் தான். எல்லாவற்றுக்கும் கொடி பிடித்துக் கோஷமிடுவது முட்டாள்த்தனம். அதை செய்வதை விட கொடிபிடித்து வரும் கரை வேட்டியில் கொள்கையும், உண்மையும், நன்மையையும் கொண்ட உள்ளங்களைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் நம் மக்களுக்கு வர வேண்டும் என்பதையே நான் விழைகிறேன்.
  4. ஒற்றுக்கொள்ளாமல் நடந்தால் பலாத்காரம். அதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன; நல்லது. ஒற்றுக்கொண்டு நடக்கும் கூத்துகளுக்கு பெயர் என்ன ? கலாச்சாரமா ? இதனைத் தட்டிக் கேட்பது யார் ? கருக்கலைப்பின் புள்ளிவிபரங்கள் உங்களில் ஒருவரையேனும் சுடவில்லையா ?
  5. பணத்தாலும், அரசியல் பலத்தாலும், அடிமைத் தனத்தாலும் இன்றும் பல இடங்களில் தவறுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைக் களைவது எப்போது ?  அந்த நாய்களுக்குத் தூக்குத் தண்டனை ஒரு தீர்வாகும் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது உலகிற்கு வேண்டுமானால் ஒரு பாடமாக அமையலாம். ஆனால் அவனுக்கு, அது ஒரு நிமிட வேதனை.  இந்தக் கொடியவனுக்கு அந்த ஒரு நிமிட தண்டனை போதுமா ?
றுதியாக, அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என நான் வேண்டிக்கொள்ளப் போவதில்லை; மாறாக, எங்கேனும், என்றேனும் ஏதோவொரு  மனித ஓநாய் , மாமிச வெறி கொண்டு மலர்களைத் தீண்டும் பொழுது அவள் கரங்கள் அதனைச் சுட்டெரிக்க வேண்டும் என்பதையே வேண்டுகிறேன் .

மூகமே ! சிந்தித்து செயல்படு; மாற்றங்கள் உன்னில் இருந்து தான் உருவாக வேண்டும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...