Sunday, December 30, 2012

ஊட்டி விடாதீர்கள்

Copyright : Harish Mohan Photography


குறிப்பு : மனதாலும் உடலாலும் காயப்பட்ட அத்தனை பெண் மலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.


சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு
பசும்பால் தோய்த்து - விரலால்
ஊட்டுவாள் - அம்மா .

ழங்களின் தோலுரித்து - அதைப்
பொடியாய் நறுக்கி - நசுக்கி
ஊட்டுவார் - அப்பா.

சாப்பிடுவது எதுவாயினும் - அதை
சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி
ஊட்டுவார் - தாத்தா.

ரொட்டித்துண்டை  நீரில் நனைத்து
அதனை அமுக்கி - குழைத்து
ஊட்டுவான் - அண்ணன்.

போதும் உறவுகளே !
இனியும் அவளுக்கு
ஊட்டி விடாதீர்கள்.

ல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்
துடிக்கும் தேசத்தில் - அவள்
தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்
அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;
ஊட்டி விடாதீர்கள்.

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, December 29, 2012

டெல்லியும் சில நாய்களும் :(

Copyright : worth1000.com

லகம் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றது. 'இந்தியா' மட்டும் தான் தவறுகளை சமூகத்தின் கண்களிலிருந்து மறைப்பதில் முனைப்புடன் இருக்கிறது. நான் இதைப் பற்றி எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன். மனம் கனத்தது. ஆதலால் ...


"வர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்; அவள் இந்தியாவின் மகள்; என்ன செய்கிறோம் நாம் ; அரசாங்கம் தூங்குகிறதா ? " என கூச்சலிடும் சமூகமே ! உன்னிடம் ஒரேயொரு கேள்வி . இதன் அடிப்படை யது என தெரியுமா ?

  1. பாரம்பரியத்தில் வாழ்ந்து வந்த இந்தியாவில் பப்புகளும், பகட்டு வாழ்கையும் செய்த புரட்சி பணம் மட்டுமல்ல ; பாலியல் பலாத்காரங்களும் தான்.
  2. நீ ஊரைத் திருத்த வேண்டாம்; உன் வீட்டில் உள்ள உன் தந்தையை, தமயனை, கணவனை, மகனை, நண்பனைத்  திருத்து; தவறுகள் குறையும். கருப்பு பக்கங்கள் இல்லாத மனிதன் மிகக் குறைவு.
  3. இலங்கைப் பிரச்சனைக்கண் ஏற்பட்ட வலிகளை இதனோடு ஒப்பிட்டு சில நண்பர்கள் வினவியிருந்தார்கள். இரண்டுமே உயிர் தான் ; இரண்டுமே உணர்வுகள் தான். எல்லாவற்றுக்கும் கொடி பிடித்துக் கோஷமிடுவது முட்டாள்த்தனம். அதை செய்வதை விட கொடிபிடித்து வரும் கரை வேட்டியில் கொள்கையும், உண்மையும், நன்மையையும் கொண்ட உள்ளங்களைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் நம் மக்களுக்கு வர வேண்டும் என்பதையே நான் விழைகிறேன்.
  4. ஒற்றுக்கொள்ளாமல் நடந்தால் பலாத்காரம். அதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன; நல்லது. ஒற்றுக்கொண்டு நடக்கும் கூத்துகளுக்கு பெயர் என்ன ? கலாச்சாரமா ? இதனைத் தட்டிக் கேட்பது யார் ? கருக்கலைப்பின் புள்ளிவிபரங்கள் உங்களில் ஒருவரையேனும் சுடவில்லையா ?
  5. பணத்தாலும், அரசியல் பலத்தாலும், அடிமைத் தனத்தாலும் இன்றும் பல இடங்களில் தவறுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைக் களைவது எப்போது ?  அந்த நாய்களுக்குத் தூக்குத் தண்டனை ஒரு தீர்வாகும் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது உலகிற்கு வேண்டுமானால் ஒரு பாடமாக அமையலாம். ஆனால் அவனுக்கு, அது ஒரு நிமிட வேதனை.  இந்தக் கொடியவனுக்கு அந்த ஒரு நிமிட தண்டனை போதுமா ?
றுதியாக, அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என நான் வேண்டிக்கொள்ளப் போவதில்லை; மாறாக, எங்கேனும், என்றேனும் ஏதோவொரு  மனித ஓநாய் , மாமிச வெறி கொண்டு மலர்களைத் தீண்டும் பொழுது அவள் கரங்கள் அதனைச் சுட்டெரிக்க வேண்டும் என்பதையே வேண்டுகிறேன் .

மூகமே ! சிந்தித்து செயல்படு; மாற்றங்கள் உன்னில் இருந்து தான் உருவாக வேண்டும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, December 23, 2012

என்னை மன்னிப்பாய் தானடி ?

Photo Courtesy : Wolfgang Lüpertz




முன் குறிப்பு : நேற்று இரவு twilight breaking dawn முதல் பகுதி பார்த்தேன் . பெல்லா எட்வர்டின் மகளைப் பிரசவிக்கும் காட்சி . அதில் என்னைப் பாதித்தது அவள் அல்ல அவன். 'மகளை விட மனைவி தான் வேண்டும்' என்னும் அவனுடைய தவிப்பு. ஆம், இப்படித்தானே ஒவ்வொவொரு கணவனும் ; ஆனால் அது பதிவு செய்யப்படாமலே இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. அதைத் தொடர்ந்தே இக்கவிதை. இது சிறப்பானதாக எனது மனம் கருதவில்லை ! இருக்கலாம் ; என் மகள் பிறக்கும் சமயத்தில் இக்கவிதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்படலாம் !



காதல் கடலில் நீராடி
காமக் கரை தொட்டு விட
கருவில் உதித்திட்டால் பௌர்ணமி
கண்மணியே - நீ சுகம் தானடி ?

வெயிற்கால மழைநாள் ஒன்றில்
வெட்கப்புன்னகை நீ சிந்த - எடுக்கச் சென்ற
 என்னிதழை எச்சில் படுத்தி சொன்னாயடி
என்னுயிரே - நீ நலம் தானடி ?

தேகமெல்லாம் நீ வாடும் போதும்
தென்றல் வந்து உன்னை தீண்டும் போதும்
தேகப்போர்வை நெய்வேனடி
தேவதையே - நீ சவுக்கியம் தானடி ?

மேடிட்ட வயிற்றில்
மெதுவாய் விரல் தீண்டி
முத்தமிட்டுச் சென்றேனடி
மென்பூவே - நீ பத்திரம் தானடி ?

லியோடு என் விரல் பிடிக்க
மழலையவள் மண் பிறக்க
செத்து விட்டேன் நானடி
செந்தாமரையே - என்னை மன்னிப்பாய் தானடி ?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...