Tuesday, September 13, 2011

களவாடிய கவிதைகள் !

Photo Courtesy : http://desigg.com

த்தி பூத்தாற்போல்
ரிதாய் பூக்கிறது 
அழகுப் பெண் பூக்கள்
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.

புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.

க்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...

யிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.

லர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?

காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்

லர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
கல்லறையில் சேர வேண்டும் - இல்லையென்றால்
கசங்கித்தான் தீர வேண்டும்.
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?

லர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.

காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



8 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...