Wednesday, April 13, 2011

வகுப்பறை

Copyright : Wikipedia



ரியைத் தோற்கடிக்கும்
கருமை கொண்ட
கரும்பலகை

 பாலை மிஞ்சிவிடும்
வெண்மையைக் கொண்ட 
சுண்ணாம்புக்கட்டி

ருப்பரும் வெள்ளையரும்
இணைந்தால் தான் அழகு பெறும்
உலகம் அழகு பெறும்
என்பதை உணர்த்தும் இவையிரண்டும்

டுக்குகள் மாறாமல் 
அழகாய் அடுக்கப்பட்டிருக்கும்
மரப்பலகைகள்

வ்வப்போது தென்றலோடு கலந்துவரும்
ஆசிரியரின் தாலாட்டு

விழிக்க மனம் நினைத்தாலும்
ஒற்றுக் கொள்ளாமல்
போராட்டம் நடத்தும் இமைகள்

சிரியரின் வார்த்தைகளை
அவரை விடவும்
அழகாய் உச்சரிக்கும் என் நண்பர்கள்

நேற்று பார்த்த 
திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்சிகள், பாடல்கள்
மறுஒளிபரப்பு செய்யப்படும்
எங்கள் வகுப்பு அலைவரிசையில்...

லகப்போர் எங்கள் வகுப்பிலும்
சுண்ணாம்புக் குண்டுகளோடு.

ர்ச்சுனனின் அம்புகளுக்கு இணையான 
அம்புகளாய் - என் நண்பர்கள்
விடுப்புமணி அடித்தவுடன்

ல்லோரும் சென்ற பின்பு
ஏக்கத்துடன் ஏங்கியிருக்கும் ஒரு ஜீவன்
அது வேறு யாருமல்ல - எனது 
வகுப்பறை தான் !  



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

                     

1 comment:

  1. கவிதை அழகாய் அமைந்து இருக்கிறது பாராட்டுக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...